Monday, December 15, 2008

பெண்ணியமும் ஆணியமும் ?

பெண்ணியமும் ஆணியமும் (அப்படி ஒன்று இருக்கிறதா )?.

பெண்ணியம் பேசும் சகோதிரிகள் மன்னிக்க , நகைச்சுவை என்ற அளவில் மட்டும் எடுத்து கொள்க :)

ஒரு பெண் அழும் போது: இந்த உலகமே அவளை தேற்றும்.

ஆண் அழும் போது : இந்த உலகம் அவனை பார்த்து "பெண்பிள்ளை போல அழாதே என்று இகழும்".

-

ஒரு பெண் ஆணை அறையும் போது : நிச்சயம் அவன் எதோ தவறாக செய்திருக்கிறான்.

ஒரு ஆண் பெண்ணை அறையும் போது : "பெண்களை மதிக்க தெரியாதவன்" என்று பெயர் தான் மிஞ்சும்.

-

பெண் ஆண்களுடன் பேசிக்கொண்டிந்தால்: "அவள் எப்படி எல்லோரிடமும் நட்பாக பழகுகிறாள் ".

ஆண் பெண்களுடன் பேசிக்கொண்டிந்தால்: "சரியான ஜொள்ளு கேஸ் ".

-

பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டால் : "மற்றவர்கள் செய்த தவறு".

ஆணுக்கு விபத்து ஏற்பட்டால் : "வண்டிய ஒழுங்கா ஓட்ட தெரியலே".



---

No comments: