Thursday, December 11, 2008

தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள்:

சும்மா இருக்க பிடிக்காமல் இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கையில் பரிசல்காரனை பார்க்க நேர்ந்தது அதில் அவர் சினிமாவில் மாற்ற முடியாத விஷயங்களை பட்டியலிடிருந்தார்,

இதோ எனக்கு தோன்றிய புள்ளிகள் (அதாங்க points). சிலவற்றை குமுதத்தில் படித்ததாக ஞாபகம்.

இந்த விஷயம் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்த சில பல சினிமாக்களுக்கு பொருந்தாது

1. கதாநாயகன் நாயகி (கள் !) கூட தெருவில் பாடி ஆடும் போது வில்லனின் ஆட்கள் கும்பலின் வெளியே பின்னால் கத்தியை வெளியே தெரியும் படி வைத்து கொண்டு காத்திருப்பார்கள்.இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

2. ஹீரோ அடிக்கும் ஒரே அடியில் வானத்திலேயே நான்கு ஐந்து முறை பல்டி அடித்து வில்லனோ அவன் ஆட்களோ விழுவார்கள். ஆனால் எந்த ஹீரோவும் அப்படி அடிவாங்கி சுற்ற மாட்டார்.

3. ஹீரோயின் கூட வரும் நண்பிகள் ஹீரோயினை விட அழகு குறைந்தவர்களாக தான் இருப்பார்கள் (லாஜிக்).

4. ஹீரோ தன் ஒரே தங்கையின் மீது ரொம்ப பாசமாக இருப்பது போல் காட்டினால், பாவம் அவளை வில்லன் கொலையோ கற்பழிப்போ
செய்து விடுவான் . (பழி வாங்குவதற்கு காரணம் வேண்டாமா).

5. கார் சேசிங் சீன் (Car chasing scene) இல் கார் ஓட்டுபவர் தேவை இல்லாமல் ஸ்ட்ரீஇங் (Steering) ஐ இப்படி அப்படி சுற்றி கொண்டே இருப்பார் ( நாங்க நிஜமாவே கார் ஒட்டுரோமில்லே).

6. ஹீரோ வரும் வரை பயந்து கொண்டிருக்கும் ஹீரோவை சார்ந்தவர்கள் climax இல் சட்டென வீரம் வந்து அவர்கள் பங்கிற்கு தானும் வில்லனின் ஆட்களுடன் சண்டை போடுவார்கள் (முக்கியமாக Comedian , ஹீரோயின் போன்றவர்கள்).

7. இரண்டு சம எடை நிறை உள்ள பொருட்கள் மோதினால் இரண்டுக்கும் சம அளவில் தான் சேதம் ஏற்படும் இது அறிவியல் உண்மை ஆனால் ஹீரோ வில்லனை தன் தலையுடன் மோத செய்தால் வில்லனுக்கு மட்டுமே வலிக்கும் ஹீரோ சிரிப்பார் (சக்திமான்???!!!).

8. தீவிரவாதி காஷ்மிரிலிருந்து மட்டுமல்ல ஏன் அப்கனிஸ்தாணிலிருந்து உலகின் எந்த மூலையிலிருந்து வந்தாலும் ஹீரோவிடம் தமிழில் தான் சவால் விடுவார்கள், ஹீரோவும் அவர்களிடம் தமிழில் தான் பதில் பேசுவார் (நேட்டிவிட்டி(Nativity) வேணுமில்ல ).

9.வில்லன்கள் , தீவிரவாதிகள் எத்தனை தடவை எத்தனை குண்டுகள் சுட்டாலும் ஹீரோ மேல படாது , ஹீரோ ஒரே துப்பாக்கியில் அத்தனைபேரையும் சுட்டு தள்ளுவார் குறியே தவறாது.

10. வில்லனின் ஆட்களின் ஒரே ஆஸ்தான வாகனம் டாட்டா சுமோ (TATA Sumo) , அதுவும் அவர்கள் ரோட்டில் போகும் போது இரண்டு பக்கமும் கத்தி செயின் போன்ற ஆயுதங்களை சுமோ விற்கு வெளியே ஆட்டி கொண்டே போவார்கள் (ஊரே நடுங்கனுமில்ல ) . (நாங்களும் ரவுடி தான், ரவுடி தான் ).

11. படத்தில் அப்பாவும் மகனும் ஃபிரெண்ட்ஸ் மாதிரி என்றால், அதை காட்டுவதற்கு இரண்டு பேரும் பியர் குடிக்கிற மாதிரி சீன் கண்டிப்பாக இருக்கும்.

12. யாராவது ரகசியம் தெரிந்தவர்கள் சாகும் போது சரியாக ரகசியத்தின் முன்பாதியை சொல்லிவிட்டு அதற்கு மேல் நேரம் இல்லாமல் செத்து போவார்கள் , அல்லது ஹீரோ அல்லது ஹீரோயினிடம் சத்தியம் வாங்கும் அளவிற்கு தான் நேரம் இருக்கும் , அவர்கள் சத்தியம் செய்த அடுத்த வினாடியில் செத்து போவார்கள்.

13. வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு மட்டும் அழகான ஹீரோயின்கள் கிடைப்பார்கள், அதுவும் ஹீரோ ரவுடி யாக இருந்தால் ஹீரோயினுக்கு காதல் பொத்துக்கொண்டு வரும்.

14. ஹீரோயின்கள் அழகாக இருந்தால் மட்டும் போதாது , அசடாகவும் நடிக்க தெரிய வேண்டும் முக்கால் வாசி தமிழ் ஹீரோயின்கள் ஸ்க்ரீன்இல்(Screen) அசடுதான்.

15. காதலை எதிர்த்த ஹீரோயினின் அப்பா அடிக்கும் அடியில் ஹீரோயின் நேராக பெட் ரூம் ஓடி சென்று தடாலென்று கட்டிலில் விழுந்து சோக கீதம் பாடுவார்.


(to be continued).

No comments: