Friday, February 27, 2009

பெண்களின் காதல்:

love பண்ணறப்போ பொண்ணுங்க சொல்லற வார்த்தைகளும் அதன் உண்மையான அர்த்தங்களும்.

I love you da --> உனக்கு கண்டிப்பா ஆப்பு தான் டா.

I miss you da --> உன்ன தொலைச்சி கட்ட போறேன் டா.

நீ தாண்டா என் உயிர் --> உன் யிர் என் கையில தான் டா.

நீ தாண்டா என் செல்லம் --> என் வீட்டு நாய் குட்டி மாதிரி உன்ன அலையை வைக்க போறேண்டா.

---

Thursday, February 19, 2009

ஈரம்!!

"கொட்டும் மழையில் நனைந்து தான் வருகிறாள்!
ஆனால் துளி கூட ஈரம்மில்லை அவள் மனதில்!!"

---

மண்ணாகி!

நான் உன்னை பார்க்கும் போது நீ மண்ணை பார்க்கிறாய்......
என்னை விட மண் அழகாக இருக்கிறதா சொல் .....
உனக்காக மண்ணோடு மண் ஆகிறேன்.....!!!


---

காகிதத்தில் கப்பல் செய்து

நான் கொடுத்த கடிதத்தை வைத்து....
அவள் கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறாள்!!
தண்ணிரில் அல்ல...,

"என் கண்ணீரில்"


---

வெட்கம்

என் கண்ணீருக்கு தான் எத்தனை வெட்கம்....!!
அவள் விலகி சென்ற பிறகு தான், அது வெளியே எட்டி பார்க்கிறது......!!!


---

கண்ணீராக

உன் சந்தோஷத்தில் கூட உன் கூட இருக்க மாட்டேன்....
ஆனால், உன் கஷ்டத்தில் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.....
கண்ணீராக.......!!!!!


---

Wednesday, February 18, 2009

என் சாவுக்கு

என் இறப்பிற்கு
மௌன அஞ்சலி
செலுத்துகிறாயே,

உனக்கு தெரியுமா?
என் இறப்பிற்கு காரணமே
உன் "மௌனம்" தான் என்பதை?

---

Tuesday, February 3, 2009

துணிச்சல்

நேற்று வரை அவளிடம் பேச பயந்த எனக்கு,

இன்று பேச துணிச்சல் வந்தது "திருமண வாழ்த்துக்கள்" என சொல்வதற்கு

---

பழி வாங்க:

ஒருவரை பழிவாங்க நல்ல
ஆயுதம்
நீங்கள் நன்றாக வாழ்ந்து காட்டுவது தான்.


---

நினைவுகள்:

நினைவுகள் பெரும் குழப்பத்தை கொடுக்கின்றன

நாம் ஒரு காலத்தில் அழுததை நினைத்தால் சிரிப்பை தருகிறது,

நாம் ஒரு காலத்தில் சிரித்ததை நினைத்தால் அழுகை தருகிறது!



---

Monday, February 2, 2009

தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனங்கள்

சும்மா மேய்ந்து கொன்டிருந்த போது கண்ணில் பட்டது, தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் வசனங்கள், மறுமொழிகளையும் படியுங்கள் , பதிவை விட அதிகமாய் வசனங்கள்.


http://inru.wordpress.com/2009/01/30/fld/

நம்முடைய கற்ப்பனையும் கொஞ்சம் சேர்த்து:


1.ஆளாளுக்கு இப்படியே பேசிக்கிட்டு இருந்த எப்படி?.

2.கற்பழிச்சவனே அந்த பொண்ண கட்டிகிடனும்! இது தான் எட்டு பட்டிக்கும் சேர்த்து தீர்ப்பு .

3.வில்லன்: எவன் லே இந்த சிவா?. "அல்லது அந்த படத்தின் ஹீரோ பேர்".

4.ஆயரம் தான் இருந்தாலும் அவரு உன்ன பெத்தவருமா.

5.ஏய் அவன் உன்ன தாண்டி பாக்குறான்.

6.காதலன் காதலியிடம் : உனக்கு நான் முக்கியமா, இல்ல (அது, அவன் , அப்பா, அம்மா , வேலை ) முக்கியமா நீயே முடிவு பண்ணிக்கோ.

7.எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் (இத யாரு சொல்லுவாங்க ன்னு சொல்லனுமா ?).

8. என் பொண்ண ரோட்ல போற பிச்சகாரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன் மகனுக்கு கொடுக்க மாட்டேன்.

9. ச்சி உனக்கு காதல பத்தி என்ன தெரியும்?.

10. உனக்கு சாவு என் கைய்யாள தாண்டா.

11. பூவ வெக்குற எடத்துல பொண்ண வெக்கனமுன்னு சொல்லுவாங்க (யாரு?).

12. எங்கள் காதல் புனிதமானது, தெய்வீகமானது,

13. ம்ம் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் (இது பழைய படத்துல தான் , இப்போ கதையே வேற).

தொடரும் :